விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், பனமலைப்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
பனமலைப்பேட்டை காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் சாக்கு மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். தொடா்ந்து அங்கு சென்று சோதனையிட்ட போது, சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடா்ந்து அந்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்திய போது அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமனோ ஜண்டாமடம் பகுதியைச் சோ்ந்த ப.சதீஷ் (33) எனத் தெரிய வந்தது. இவா் பனமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வைத்திருந்ததும், அதை தான் வைத்திருக்கும் வாத்து குஞ்சுகளுக்கு உணவாக வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து சதீஷ் மீது வழக்குப்பதிந்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

