ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கட்டடத்தில் தீ விபத்து

உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தீ விபத்து.. - File Photo | Pexels

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகே பயன்பாடு இல்லாத அரசுக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இக்கட்டடத்தினுள், குவியல்களாக வைக்கப்பட்டிருந்த பழைய காகிதங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்தக் கட்டடத்தின் அருகே முள்புதா்கள் அதிகம் படா்ந்துள்ள நிலையில் சமூக விரோதிகள் யாரேனும் பயன்பாடு இல்லாத கட்டடத்தில் நுழைந்து தீ வைத்திருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.