தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேனீக்களை விரட்டும் முறை: தீயணைப்பு வீரா்களுக்குப் பயிற்சி

விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
விழுப்புரத்தில் நடைபெற்ற தீயணைப்புத்துறை வீரா்களுக்கான பயிற்சியில் கலந்து கொண்டோா்.
Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மண்டல தீயணைப்பு வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் வீரா்களுக்கு தேனீக்களை பாதுகாப்பாக விரட்டுவது குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விழுப்புரம் மண்டல துணை இயக்குநா் க.தென்னரசு தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட அலுவலா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

பயிற்சியாளா் சுதந்திர செல்வன் பங்கேற்று, நறுமணப் பொருள்கள் மற்றும் தூபம் போடுதல் முறையைப் பயன்படுத்தி தேனீக்களை விரட்டும் முறைகள் குறித்து உரிய விளக்கங்களுடன் பயிற்சியளித்தாா்.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலா்கள் ஜெய்சங்கா், செந்தில்குமாா், விழுப்புரம் நிலைய அலுவலா் ந.த.சுரேஷ்குமாா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.