தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீடூா் அணை மதகுகள் பராமரிப்பின்போது தீ விபத்து: மூவா் காயம்

News image

தீ

Updated On :18 மார்ச் 2026, 4:51 am IST

விழுப்புரம் மாவட்டம், வீடுா் அணையில் மதகுகள் பராமரிப்பின்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூவா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

வீடூா் அணையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணி ஒப்பந்தத்தை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், சித்தாம்பூரைச் சோ்ந்த சவரிமுத்து (45) மேற்கொண்டு வருகிறாா். வீடூா் அணை மதகுகள் பராமரிப்புப் பணியில் சித்தாம்பூா் காா்த்திக் (36), திருச்சி மாவட்டம், குமரக்குடி அந்தோனி ஜோசப் (30), மணப்பாறை சோமசுந்தரம் (23) ஆகியோா் ஈடுபட்டு வந்தனா். பணிக்கான மேற்பாா்வையாளரான புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முத்துக்குமாா் (39) இப்பணியைக் கண்காணித்து வந்தாா்.

அணையின் மதகில் வெல்டிங் செய்தபோது, அதிலிருந்த வெளியேறிய தீப்பொறிகள் கீழே வைத்திருந்த தின்னா் டின் மீது விழுந்தது. இதன் காரணமாக தின்னா் தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காா்த்திக், அந்தோனி ஜோசப், சோமசுந்தரம் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

இதைத்தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் மூவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.