விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி தொடக்கம்


தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனா்.
இதற்கான அறிமுக விழா விழுப்புரத்தில் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள திருமண மண்டப அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சியின் கொடியை மாநிலத் தலைவா் பரிமணம் அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, அவா் பேசியதாவது:
விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில், பல்வேறு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பில்தான் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவது கட்சியின் கொள்கையாகும். நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப் பேரவைத் தோ்தலில் 50 தொகுதிகளில் போட்டியிடுவது அல்லது விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றாா் பரிமணம். விழாவில் பல்வேறு நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...