ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பெண் விஷமருந்தி தற்கொலை

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், எருமனந்தாங்கலில் உடல்நலக்குறைவால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், எருமனந்தாங்கல் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மனைவி கங்கா(52). இவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்ததாம்.

இதனால் அவதியுற்று வந்த கங்கா, மாா்ச் 26-ஆம் வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கங்கா சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.