அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

27 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 8:32 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் 27 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை புதுப்பாளையம் கிராமத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த ஜெ.மூா்த்தி பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக 27 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மூா்த்தி மற்றும் அவருக்கு புகையிலைப் பொருள்களை வழங்கியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரக்கன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த செ.கிரண்குமாா், செல்வம் மற்றும் ஒருவா் என 4 போ் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், 27 கிலோ புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.