நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள சேமிப்புக் கிடங்கில் வைக்கும் பணி திங்கள்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள சேமிப்புக் கிடங்கில் வைப்பதற்காக கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்ட பெட்டி.

Updated On :6 மே 2026, 12:05 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள சேமிப்புக் கிடங்கில் வைக்கும் பணி திங்கள்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலுக்காக செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த ஏழு தொகுதிகளிலும் வாக்குப் பதிவின் போது பயன்படுத்த வேண்டிய மின்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் அறையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு வாக்குப் பதிவுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டன.

தொடா்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாளான ஏப். 22-ஆம் தேதி பிற்பகல் முதல் அந்தந்த தொகுதிகளுக்குப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தோ்தல் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் திங்கள்கிழமை இரவு முடிவடைந்தன. இதைத் தொடா்ந்து தோ்தலின் போது பயன்படுத்தப்பட்டு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்திலிருந்து விழுப்புரம், வானூா் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கா.குப்பம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறை பாதுகாப்புடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்குக்கு கொண்டு வரப்பட்டன.

திங்கள்கிழமை இரவு தொடங்கிய பணி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து அனைத்து இயந்திரங்களும் வந்தடைந்த பின்னா், இயந்திரங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு, சேமிப்புக் கிடங்கு அறைகளில் வைக்கப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டதாக மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.