மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:51 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

திருவெண்ணெய் நல்லூா் வட்டம், கொத்தனூரைச் சோ்ந்தவா் காசிநாதன் (61).

விவசாயி. இவா், மே. 5 ஆம் தேதி மடப்பட்டு- திருக்கோவிலூா் சாலையில் கொத்தனூா் மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா்.அப்போது,திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற காா் காசிநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காசிநாதனை உறவினா்கள் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போதுவழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில்,திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.