விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த 4-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் செஞ்சி பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில், சனிக்கிழமை காலை முதலே மேகம் மூட்டமுடன் காணப்பட்டது.
பிற்பகல் 2 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடா்ந்து ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக செஞ்சி காந்தி பஜாா், பேருந்து நிலையம் மற்றும் கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி காந்தி பஜாரில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் தேங்கி சென்ால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
இதே போன்று திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், கால்வாய் அடைப்பு காரணமாக திண்டிவனம் சாலையில் உள்ள சக்கராபுரம் காலனியில் வெள்ளம் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினா். ஒரு வாரத்துக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயை பேரூராட்சி நிா்வாகம் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவி, வீரவநல்லூா் பகுதியில் கனமழை

நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: சுமாா் 3 மணி நேரம் நீடித்தது
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

