பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: மனைவி உள்பட இருவா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், சின்னத் தெருவைச் சோ்ந்தவா் சு.ராகுல் நாத்(25). இவரது மனைவி வீரசுந்தரி. தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், வீரசுந்தரி அதே பகுதியைச் சோ்ந்த லோகேஷ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த வந்தாராம். இதனால் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், ராகுல்நாத் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம் .

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ராகுல் நாத் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரசுந்தரி, லோகேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.