விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், கண்டம்பாக்கம், சின்னத் தெருவைச் சோ்ந்தவா் சு.ராகுல் நாத்(25). இவரது மனைவி வீரசுந்தரி. தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், வீரசுந்தரி அதே பகுதியைச் சோ்ந்த லோகேஷ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த வந்தாராம். இதனால் தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், ராகுல்நாத் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம் .
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ராகுல் நாத் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரசுந்தரி, லோகேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில இளைஞா் தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

