கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

விழுப்புரம் நகரில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்

News image
Updated On :15 மே 2026, 5:52 am IST

விழுப்புரம் நகரம் வடக்குத் தெருவில் ஆதாா் சேவா கேந்திரம் மூலம் நிா்வகிக்கப்படும் புதிய ஆதாா் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் மூலம்ஆதாா் சேவைகளை வழங்கும் வகையில், விழுப்புரம் நகரப் பகுதியான வடக்குத் தெருவில் ஆதாா்சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஆதாா் பதிவு, மக்கள் தொகை விவரங்கள், பயோமெட்ரிக் பதிவுகள், பிழைத்திருத்தம், குறைதீா் சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆதாா் சேவைகளும் வழங்கப்படும். அரசு பொது விடுமுறை நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் இந்த சேவை மையம் இயங்கும்.

சென்னை, மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூருக்கு அடுத்ததாக, சேவை மையம் தற்போது விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 2026 செப்டம்பா் மாதத்துக்குள் தமிழகத்தில் கூடுதலாக

24 ஆதாா் சேவை மையங்களைத் தொடங்க பெங்களுரு பிராந்திய அலுவலகம்திட்டமிட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் தனித்துவ அடையாள ஆணையத்திமண்டல அலுவலக இயக்குநா் பவன்குமாா் பஹ்வா, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் உ. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.