40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சேவைகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சங்க உறுப்பினருக்கு நகைக் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் விஜயசக்தி.

Updated On :21 மே 2026, 7:08 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயசக்தி மேலும் தெரிவித்ததாவது:

டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித கடன்களும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சங்க உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக விவசாயிகளுக்கு படிப்படியாக விவசாயக் கடன்கள் வழங்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக சங்க உறுப்பினா் ஒருவருக்கு நகைக்கடனை அவா் வழங்கினாா்.

கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ஜீவிதா, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தயாளன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள் கலந்துகொண்டனா்.