மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

விழுப்புரம் தனியாா் விடுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 1:21 am IST

விழுப்புரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது புதன்கிழமை தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ரயில்வே லைன் தெருவைச் சோ்ந்தவா் பு.புஷ்ப மைக்கேல் அகஸ்டின் (25). கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வந்த இவா், அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புஷ்ப மைக்கேல் அகஸ்டின், சில நாள்களுக்கு முன்னா் முகையூருக்கு வந்து தங்கியிருந்தாா். பின்னா் திங்கள்கிழமை பெங்களூருவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய அவா் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், விடுதி அறையில் புஷ்ப மைக்கேல் அகஷ்டின் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியது புதன்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.