இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

பொன்பத்தி செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம்

பொன்பத்தி கிராமத்தில் உள்ள செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

News image

பொன்பத்தி செம்பாத்தம்மன், பச்சையம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :28 மே 2026, 1:23 am IST

விழுப்புரம் மாவட்டம், பொன்பத்தி கிராமத்தில் உள்ள செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

பொன்பத்தி கிராமத்திலுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருத்தோ் உற்சவ விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் உற்சவா் வீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலையில் செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், திரௌபதி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஊரணி பொங்கல் மற்றும் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து உற்சவா் செம்பாத்தம்மன், பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனா்.

திருவிழாவில் பொன்பத்தி, செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.