ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம் பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.
பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்
<br /> </p><p align="justify"><strong>பாடியவர் சற்குருநாதன் </strong></p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237672256&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><br /><strong>விளக்கம்</strong></p><p align="justify">வாய் ஓவாள் = வாய் ஒழியாமல் பேசுவாள். ஓவா = இடைவிடாத. தாரை = தீர்த்துளி. வார் = கச்சு. ஏர் = எழுச்சி. தங்களின் தோழி ஒருத்திக்கு நடந்த அனுபவங்களை விவரித்துக் கூறும் ஒரு பெண்மணி, அவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த இறைவனை பாடியவாறு நீராடலாம் என்று கூறுகின்றாள். வித்தகர் = சாமர்த்தியம் உடையவர். அரையன் = அரசன்.</p><p align="justify"><br /><strong>பொருள்</strong></p><p align="justify">ஒரு முறை எனது பெருமான் என்று தனது வாய் திறந்த சொன்ன எமது தோழி, அதன் பின்னர், வாய் ஒழியாமல் பெருமானின் சிறப்புகளைப் பேசுகின்றாள். பெருமானைப் பற்றிப் பேசுவதால், அவளின் சிந்தை களிப்புற்று, கண்களிலிருந்து தாரை தாரையாக, இடைவிடாது கண்ணீர் வழிகின்றது. மற்ற தேவர்களைப் பணியாத அவள், நிலத்தினில் விழுந்து சிவபெருமானைப் பணிந்த பின்னர், நிலத்திலிருந்து எழாமல் வெகுநேரம் கிடக்கின்றாள். இவ்வாறு, இந்த பெண்ணைத் தன் மீது பித்துக்கொள்ளச் செய்த சிவபெருமானை, சாமர்த்தியம் உடையவனை, மார்பினில் நகைகளையும் கச்சினையும் அணிந்த பெண்களாகிய நாம் அனைவரும், நமது வாயார பாடி, பொய்கையில் உள்ள நீரின் திவலைகள் மேலே எழுமாறு, பாய்ந்து நீராடுவோம்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

