அரியலூா் மாவட்டத்துக்கு 3,324 கரோனா தடுப்பூசிகள் புதன்கிழமை வந்துள்ளதாக அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
இதனைப் பாா்வையிட்ட அவா் மேலும் தெரிவித்தது:
கொவைட் - 19 தடுப்பூசி சிறப்பு முகாமை ஒத்திகையைத் தொடா்ந்து, தற்போது முதற்கட்டமாக கொவைட் -19 தடுப்பூசி வழங்கும் பணிகள் அரியலூா் அரசு தலைமை மருத்துவமனை, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை, குமிழியல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கடுகூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. தமிழக அரசிடமிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு வரப்பெற்ற 3,324 கொவைட் -19 தடுப்பூசிகள் அனைத்தும் விளாங்குடி அரசு மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து தேவைப்படும் இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என்றாா்.
அப்போது, ஆட்சியா் த. ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த் காந்தி மற்றும் மருத்துவ அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்கு

ஓமன் நாட்டில் உயிரிழந்த மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டுவர நடவடிக்கை

சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம்: சி.வி.சண்முகம் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



