5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
தனது சமயோசித புத்தியால் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். ராசியில் இருக்கும் களத்திரகாரகன் சுக்கிரன் சஞ்சாரத்தால் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.
தொடர்புடையது

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 9

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 8

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 7

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 1
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



