திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

643 புதிய பேருந்துகள் வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டம்

ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Updated On :4 ஜனவரி 2021, 3:48 am IST

ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கிவரும் 900 பேருந்துகளின் இயக்கக் காலம் காலாவதியாகிவிட்டதால் ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 2020-21-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,500 டீசல் பேருந்துகளை வாங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக, புதிய பேருந்துகள் வாங்கும் முடிவு தள்ளிப்போடப்பட்டிருந்தது.

தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி 1,500 பேருந்துகளுக்கு பதிலாக, 643 பேருந்துகளைக் கொள்முதல் செய்ய பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியதாவது:

கரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகளின் தேவை குறைவாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக பேருந்துகளின் தேவை அதிகரித்து வருவது பேருந்து தேவைமதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.

புதிதாக வாங்கப்படும் 643 பேருந்துகளும் குளிரூட்டப்பட்ட பேருந்தாக இருக்காது. ஆனால், இப் பேருந்துகள் பாரத் ஸ்டேஜ்-6 தரப்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த வகை பேருந்துகள் மாசு குறைப்புக்கு உதவியாக இருக்கும். புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக பிப்.12-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. அதன்பிறகு பேருந்துகள் தயாரிக்கப்பட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் அளிக்கப்படும்.

இதுதவிர 380 மின் பேருந்துகளை வாங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பொலிவுறு மாநகரத் திட்டம் நிறுவனத்தின் சாா்பில் 80 மின்-பேருந்துகளுக்கு பகுதிநிதியுதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் மின்-வாகனத் திட்டத்தில் 300 மின்-பேருந்துகளும் வாங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.