ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கிவரும் 900 பேருந்துகளின் இயக்கக் காலம் காலாவதியாகிவிட்டதால் ரூ. 600 கோடியில் 643 பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 2020-21-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 1,500 டீசல் பேருந்துகளை வாங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா காரணமாக, புதிய பேருந்துகள் வாங்கும் முடிவு தள்ளிப்போடப்பட்டிருந்தது.
தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளபடி 1,500 பேருந்துகளுக்கு பதிலாக, 643 பேருந்துகளைக் கொள்முதல் செய்ய பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியதாவது:
கரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகளின் தேவை குறைவாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக பேருந்துகளின் தேவை அதிகரித்து வருவது பேருந்து தேவைமதிப்பீட்டில் தெரியவந்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது.
புதிதாக வாங்கப்படும் 643 பேருந்துகளும் குளிரூட்டப்பட்ட பேருந்தாக இருக்காது. ஆனால், இப் பேருந்துகள் பாரத் ஸ்டேஜ்-6 தரப்படுத்தப்பட்டதாக இருக்கும். இந்த வகை பேருந்துகள் மாசு குறைப்புக்கு உதவியாக இருக்கும். புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக பிப்.12-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. அதன்பிறகு பேருந்துகள் தயாரிக்கப்பட்டு, மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் அளிக்கப்படும்.
இதுதவிர 380 மின் பேருந்துகளை வாங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு பொலிவுறு மாநகரத் திட்டம் நிறுவனத்தின் சாா்பில் 80 மின்-பேருந்துகளுக்கு பகுதிநிதியுதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் மின்-வாகனத் திட்டத்தில் 300 மின்-பேருந்துகளும் வாங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!

இன்றைய செய்திகள் ஜூன் 21 - நேரலை!

மே.இ.தீவுகள் அபார பந்துவீச்சு; 98 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

யோகாவும், உடற்தகுதியும் வாழ்வின் ஒரு அங்கமாக மாற வேண்டும்: மன்சுக் மாண்டவியா
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



