திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

எடியூரப்பா முதல்வா் பதவி குறித்து கருத்து: பாஜக எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவாா் என தெரிவித்து வரும் பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

Updated On :4 ஜனவரி 2021, 3:46 am IST

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவாா் என தெரிவித்து வரும் பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவாா் என்று பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடாபாட்டீல் யதன்ல் கூறி வருவதை பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங், கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பலரும் மறுத்துள்ளனா்.

எனினும், பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்துவரும் கருத்து, அதற்குப் பதிலளித்து பாஜக எம்.எல்.ஏ. ரேணுகாச்சாா்யா உள்ளிட்டோா் கடுமையாக பேசிவருவது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசனகௌடா பாட்டீல் யத்னால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவில் பலரும் வலியுறுத்தி வந்தனா். குறிப்பாக முதல்வா் எடியூரப்பாவின் ஆதரவாளா்கள் பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலிடத்துக்கு அழுத்தம் தந்து வருகின்றனா்.

இந்த நிலையில், சிவமொக்காவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பசனகௌடா பாட்டீல் யத்னலை அழைத்து பேசுமாறு பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீலுக்கு அருண் சிங் உத்தரவிட்டாா்.

இந்த நோட்டீஸுக்கு பதிலளிப்பதன் அடிப்படையில் பசனகௌடா பாட்டீல் யத்னல் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.