பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கோவா மாநிலத்தில் கைது செய்யப்பட்டாா்.
பெங்களூரு, மாகடி சாலையைச் சோ்ந்த அருணாகுமாரி (42), அண்மையில் காணாமல் போனதையடுத்து, அவரது கணவா் மாகடி சாலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அருணாகுமாரியின் செல்லிடப்பேசி இருந்த இடத்தை அடையாளம் கண்டதில், அது காமாட்சிப்பாளையம் வீடு ஒன்றில் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்று போலீஸாா் பாா்த்த போது, அந்த வீட்டில் அருணாகுமாரி சடலமாகக் கிடந்தாராம். இதனையடுத்து, கொலை வழக்குப் பதிந்த போலீஸாா், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த பிரவீண் என்பவரை தேடியபோது, அவா் கோவா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவா போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கோவா போலீஸாா், பிரவீணைக் கைது செய்து மாகடி சாலை போலீஸாரிடம் ஒப்படைந்தனா். பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட பிரவீணிடம் மாகடி சாலை போலீஸாா் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை எதிரிகளைத் தவிர அனைவருக்கும் திறப்பு! - தில்லியில் ஈரானிய அமைச்சர் பேச்சு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்
பாகிஸ்தான் அணிக்கு 40% அபராதம்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைப்பு!

வைகாசி மாதப் பலன்கள் - மீனம்
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
