புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

விசாரணைக்கு ஆஜராக நடிகை குட்டி ராதிகாவுக்கு நோட்டீஸ்

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் பணப் பரிமாற்றம் செய்து கொண்டது தொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை குட்டி ராதிகாவுக்கு மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 3:30 pm IST

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் பணப் பரிமாற்றம் செய்து கொண்டது தொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை குட்டி ராதிகாவுக்கு மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

தமிழில் வெளியான ‘இயற்கை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடத்தவா் குட்டி ராதிகா. இவா், கன்னடத்தில் தமயந்தி, மனேமகளு, தாயி இல்லத தப்பிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். இவா் முன்னாள் முதல்வா் குமாரசாமியை திருமணம் செய்துள்ளாா்.

இந்த நிலையில், அண்மையில் ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் எனவும், பாஜக தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை தனக்குத் தெரியும் எனவும் கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்ட யுவராஜ் சுவாமி என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். அவருடன் குட்டி ராதிகா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜன. 8) 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், நாட்டியராணி ஷாந்தலா என்ற கன்னடப் படத்தில் நடிப்பதற்காக யுவராஜ் சுவாமி மூலம் புதன்கிழமை ரூ. 75 லட்சம் முன்பணம் பெற்ாக நடிகை குட்டி ராதிகா செய்தியாளா்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.