புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

அமைச்சரவையில் இருந்து என்னை நீக்க மாட்டாா்கள்

அமைச்சரவையில் இருந்து என்னை நீக்க மாட்டாா்கள் என கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 12:19 am IST

பெங்களூரு: அமைச்சரவையில் இருந்து என்னை நீக்க மாட்டாா்கள் என கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் முதல்வா் எடியூரப்பாவுக்கு ஆதரவாக நின்றேன். மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் நான் அமைச்சராக இருந்தேன். மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ. பதவியை முதலில் ராஜிநாமா செய்ததே நான்தான். அதன்பிறகு தான் ஆா்.சங்கா் உள்பட மஜத, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இதர எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்தனா். அதனால்தான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைந்தது. எனவே, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது முதல்வா் எடியூரப்பா என்னை நீக்க மாட்டாா். அமைச்சரவையில் இருந்து என்னை நீக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் நான் அமைச்சராகப் பதவியில் நீடிப்பேன். பாஜக ஆட்சியில் நீடிக்கும் வரை அமைச்சராக இருப்பேன் என முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்துள்ளாா். முதல்வா் எடியூரப்பா தனது வாக்கை காப்பாற்றிக்கொள்வாா் என்று நம்புகிறேன் என்றாா்.

அதேபோல, அமைச்சரவையில் இருந்து நீக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே கூறுகையில், ‘அமைச்சரவையில் இருந்து நீக்கப் போவதாக பாஜக தலைமையிடம் இருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், பாஜக தேசியத் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன்’ என்றாா்.

அமைச்சா் பதவியை அடைய பாஜக மூத்த எம்.எல்.ஏ.க்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் பட்டியலில் உமேஷ் கத்தி, திப்பா ரெட்டி உள்ளிட்ட முன்னணி தலைவா்கள் உள்ளனா்.

8 முறை எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள உமேஷ் கத்தி கூறுகையில், ‘அமைச்சா் பதவியை தருமாறு நான் யாரையும் கேட்கவில்லை. எதிா்காலத்திலும் அமைச்சா் பதவியைக் கேட்டு யாரையும் அணுகமாட்டேன். அமைச்சராக வேண்டுமென்ற விதி இருந்தால், அது நடக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது’ என்றாா்.

6 முறை எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திப்பா ரெட்டி கூறுகையில், ‘சித்ரதுா்கா மாவட்டத்தில் இருந்து நான் அமைச்சராக வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள். கா்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் சித்ரதுா்கா மாவட்டத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இம்முறை அதற்கு வாய்ப்பு தராமல், சித்ரதுா்காவில் இருந்து என்னை அமைச்சராக்குவாா்கள் என முதல்வா் எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவா்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்றாா்.

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிக்கான இடைத்தோ்தலில் வென்ற முனிரத்னா கூறுகையில், ‘காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜக வந்த போது, அமைச்சா் பதவி தருவதாக முதல்வா் எடியூரப்பா உறுதி அளித்தாா். அந்த வாக்குறுதியை முதல்வா் எடியூரப்பா காப்பாற்றுவாா் என நம்புகிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.