முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ரூ. 9 கோடி மதிப்புள்ள ‘பிட்காயின்’கள் பறிமுதல்

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 ‘பிட்காயின்’களை (எண்ம கரன்சி) போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:07 am IST

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 ‘பிட்காயின்’களை (எண்ம கரன்சி) போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அண்மையில் கூரியா் மூலம் போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ஸ்ரீகிருஷ்ணா போதைப்பொருள்களை கடத்தியது மட்டுமின்றி, சைபா் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்ததில், அரசு, தனியாா் உள்ளிட்ட இணையதளங்களை முடக்கி, அது தொடா்பான தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது மட்டுமின்றி, பிட்காயின்களையும் இணையவழி மூலம் திருடி வந்துள்ளாா்.

இதனையடுத்து அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 பிட்காயின்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட அவரது நண்பா்களை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.