பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்! கவிஞர் ஜெயபாஸ்கரன்

எண்ணுவதை எல்லாம் இரவு பகலாக அமர்ந்து எழுதிக் குவித்துவிடுவது எழுத்தாகாது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 3:19 am IST

எண்ணுவதை எல்லாம் இரவு பகலாக அமர்ந்து எழுதிக் குவித்துவிடுவது எழுத்தாகாது. யாரும் படிக்காத நிலையில் நூறு புத்தகங்களை எழுதுவதால் இச்சமூகத்துக்கு என்ன பயன்? எழுத்தாளர் என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டு எழுதுவோரின் எழுத்துகளில் ஓர் அறம் இருக்க வேண்டும். அப்பழுக்கற்ற சமூக அக்கறை, எழுத எடுத்துக் கொண்ட கருப்பொருளை முன்வைத்த ஒரு தர்க்கம், மொழி நடையில் தரம் இருக்க வேண்டும்.

"எழுத்து எனக்குச் சோறு போடவில்லை. எனக்கு விருதுகள் வழங்கப்படவில்லை. எனக்கு அங்கீகாரம் இல்லை' என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரற்றுகிற மனப்பான்மை எழுத்து அறத்துக்கு எதிரானது. எழுதுகிறவர்கள் விருதுகளை நோக்கி விரைவதும், அதற்காக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தி வியர்வையைத் துடைத்துக் கொள்வதும் வேதனையாக உள்ளது.

இந்திய மதிப்பில் சற்றேறக்குறைய 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நோபல் விருதுகளைக் கூட சிலர் மறுத்திருக்கிறார்கள். அதற்கு அந்த எழுத்தாளர்கள் கூறிய காரணங்கள், ஓர் எழுத்தாளன் என்கிற வீரியமான, கம்பீரமான, மானுட மாண்புகள் நிறந்த அறவுணர்வுடன் வெளிப்பட்டவையாக உள்ளன.

எழுத்தாளர்கள் சமூகத்தின் நீதிபதிகள். அவர்கள் சரியாக எழுதினால், அது சமூகத்துக்கான தீர்ப்பாக இருக்கும். யாருமே பார்க்க வாய்ப்பில்லாத, எங்கோ இருக்கின்ற, ஆதரவற்ற ஒரு பொருளின் மீது சூரிய ஒளி படர்வது போல எழுத்தாளரின் பார்வை இருக்க வேண்டும் என்கிறார் உலகப் புகழ் பெற்ற கவிஞன் வால்ட் விட்மன். எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்கிறார் மகாகவி பாரதி. அந்த இரு தெய்வங்களையும் அறிவுச்சுரபியாக மாற்றி, அதிலிருந்து சமூகத்துக்கு அள்ளிக் கொடுக்கலாம். ஆனால், அதை யாசகப் பாத்திரமாக்கி எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிடக் கூடாது. ஓர் எழுத்தாளன் உண்மையாகவே எழுதுகிறான் என்றால், அவனைச் சமூகம் தனது கைகளில் ஏந்திக் கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.