பங்குச் சந்தை பரிமாற்று வாரிய (திருத்த) மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.
பங்குச் சந்தைகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் (எஸ்.ஏ.டி.) தலைவரை நியமிப்பதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. இதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதியாக 7 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
இப்போது உள்ள நடைமுறைப்படி, பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை மட்டுமே தலைவராக நியமிக்க முடியும். ஆனால், இத்தகை நபரை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதால், இந்த பதவி கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது.
பங்குச் சந்தை பரிமாற்று வாரியம் (செபி) வழங்கும் உத்தரவை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கான அமைப்புதான் எஸ்.ஏ.டி. என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

