பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

’ஜியோ 5ஜி’ ஸ்மார்ட்ஃபோன் விரைவில் அறிமுகம்: என்ன விலை?

ரிலையன்ஸ் குழுமம் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:26 pm IST

ரிலையன்ஸ் குழுமம் ஜியோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. அதில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையையும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாகக் கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அதிா்வெண் கொண்ட அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் 5ஜி சேவையையும் அதற்கான ‘ஜியோஃபோன் 5ஜி’ என்கிற புதிய ஸ்மார்ஃபோனையும் இந்தியாவில் வருகிற ஆக.29 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வேகமான இணையச் சேவையைத் தாங்கும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.9,000-லிருந்து ரூ.12,000 வரை இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

‘ஜியோஃபோன் 5ஜி’​ சிறப்பம்சங்கள் : (தகவல்)

* 6.50 இன்ச் அளவுகொண்ட திரை

* ஸ்னாப்டிரகன் 480 எஸ்ஓசி

* 4ஜிபி ரேம் மற்றும் 38 ஜிபி மெமரி

* பின்பக்கம் 13எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 8 எம்பி.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* ஆண்டிராய்ட் 11 (கோ எடிசன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.