எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அக்.12க்குள் 5ஜி சேவை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:39 pm IST


நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தெரிவித்துள்ளார். 

5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தில், 5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிகபட்சமாக ரூ.87,946.93 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாக கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.43,0039.63 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கு அலைக்கற்றைகளை வாங்கியது. அதானி நிறுவனம் 26 ஜிகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்டவற்றை ரூ.211.86 கோடிக்கு வாங்கியது. 

ஏலத் தொகையை 20 ஆண்டு தவணைகளாக செலுத்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், ஏா்டெல் நிறுவனம் 4 ஆண்டுகளுக்கான தவணை தொகையான ரூ.8,312.4 கோடியை முதல் தவணையாக தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு செலுத்தியது.

அதுபோல, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.7,864.78 கோடியையும், வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.1,679.98 கோடியையும், அதானி நிறுவனம் ரூ. 18.94 கோடியையும் முதல் தவணையாக செலுத்தின.

முதல் முறையாக. அலைகற்றை ஏலம் எடுத்த நிறுவனங்கள் முன்பணம் மொத்தம் ரூ.17,876 கோடியை செலுத்திய அதே நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்களை தொலைத் தொடா்புத் துறை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி  அலைக்கற்றை வேகம் 4ஜியை விட 10 மடங்கு வேகமாக மாறும் என்று கூறியிருந்தார். 

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சமூக ஊடகத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகுமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  5ஜி சேவைகளை விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம், தொலைத்தொடர்பு பணியாளர்கள் அந்த வகையில் செயல்பட்டு வருகின்றனர். 5ஜி சேவையை விரைந்து அறிமுகப்படுத்தி வழங்குவதில் நிறுவனங்கள் உற்சாகமாக உள்ளன. 

வரும் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் 5ஜி அலைக்கற்றை சேவைகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, தில்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, புணே ஆகிய 13 நகரங்களில் மட்டுமே வேகமான இணையச் சேவை கிடைக்கும். பின்னர் நகரங்களைத் தொடர்ந்து படிப்படியாக கிராமங்களையும் 5ஜி சேவை சென்றடையும் என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

5ஜி சேவைக்கான கட்டணம் ஆரம்பத்தில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், சேவை விரிவுப்படுத்தப்படும் போதும், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதும் கட்டணம் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

சமீபத்தில் 5ஜி சேவைகளின் விலை அல்லது வெளியீட்டில் அரசு தலையிட விரும்பவில்லை என்றும்  தொலைத்தொடர்புத் துறை செயலாளர் கே.ராஜாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.