எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்

'உன் உணர்வுகளை நீ ஆள்கிறாயா, இல்லை உணர்வுகள் உன்னை ஆள்கின்றனவா?' என்ற கேள்வியை சுற்றி வருகிறது இந்தப் புத்தகம்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:27 pm IST

எமோஷனல் இன்டெலிஜென்ஸ்- இட்லியாக இருங்கள் 4 (உணர்வால் முடியும்) -சோம.வள்ளியப்பன்; பக்.240; ரூ.270; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 95000 45609.

நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளில் 90% நம் உணர்வுகளை சரியாக கையாளாததால் வருவதுதான். கோபத்தில் எடுக்கும் முடிவு, பயத்தில் தவறவிடும் வாய்ப்பு, சோகத்தில் இழக்கும் நட்பு- இவை அனைத்துக்கும் தீர்வு சொல்ல வந்திருக்கிறது இந்த உணர்வால் முடியும் நூல்.

'இட்லியாக இருங்கள்' தொடர்கள் மூலம் ஏற்கெனவே ஏராளமான வாசகர்களின் மனதை வென்ற சோம.வள்ளியப்பன், இந்த 4-ஆவது புத்தகத்தில் உணர்வுகள் என்ற ஆழமான விஷயத்தை மிக எளிமையாக சொல்லியிருக்கிறார்.

'உன் உணர்வுகளை நீ ஆள்கிறாயா, இல்லை உணர்வுகள் உன்னை ஆள்கின்றனவா?' என்ற கேள்வியை சுற்றி வருகிறது இந்தப் புத்தகம்.

ஒவ்வோர் உணர்வுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டால் அதுவே நமது சக்தியாக மாறும் என்பதே எழுத்தாளரின் வாதம்.

எளிமையான நடை, வாடிக்கையாளர்கள், நண்பர்கள், தன் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து சொல்லும்போது மிகவும் நெருக்கமாக உணர முடிகிறது. கனமான உளவியல் கருத்துகள்கூட அன்றாட வாழ்வின் எளிய உதாரணங்களுடன் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றன.

வெறும் அறிவுரைகள் இல்லாமல் வாசகர்கள் உடனே பின்பற்றக்கூடிய நடைமுறை வழிமுறைகளை தந்திருப்பது இந்நூலின் பலம்.

உணர்வுகளை அடக்காதே, அவற்றைப் புரிந்து கொள். அப்போதுதான் அவை உனக்கு நண்பனாகும். எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அது அதிகமாகிவிட்டால் அறிவு தீபம் அணைந்துவிடும். உணர்வின் இருட்டாட்சிதான் நடைபெறும் போன்ற வரிகள் கவர்ந்தவை.

சின்ன விஷயத்துக்குகூட கோபம் கொள்பவர்களுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்லும். உணர்வால் முடியும் என்பது வெறும் புத்தகம் அல்ல. இது ஒரு பயிற்சி கையேடு. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.