பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 696 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.
பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 696 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் உயர்வால் இன்று பங்குச் சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.

உக்ரைன் - ரஷியா போர் தாக்கத்தால் தடுமாறி வரும் பங்குச் சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (மார்ச்-21) 57,292.49 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,297.5 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 696.81 புள்ளிகள் உயர்ந்து 57989.30 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,117.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,120.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 197.90 புள்ளிகள் அதிகரித்து 17,315.50 புள்ளிகளில்  நிலைபெற்றது.

சில நாள்களாக இறக்கத்தைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை கடந்த சில நாள்களாக மெல்ல மீண்டு வருகிறது.

குறிப்பாக ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ்,டிசிஎஸ், கோடாக் மகிந்த்ரா பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com