புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 50 சதவிகிதம் சரிவடைந்து ரூ.7,925 கோடியாக குறைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. கடந்த நிதியாண்டில் ரூ.15,952 கோடி நிகர லாபம் ஈட்டியது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய் ரூ.1,32,631.72 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,07,397 கோடியானது.
எல்.ஐ.சி.யின் மொத்த வருமானம், கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.2,22,215 கோடி ரூபாயில் இருந்து ரூ.2,01,587 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.