இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிய மருத்துவமனைகள்

மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிதாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்

Updated On :12 மார்ச் 2013, 3:09 am IST

மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிதாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு விவரம்:

மண்டலம் 1-ல், பகுதிக்கு ஒன்றாக 3 சித்த மருத்துவமனைகள், மண்டலம் 3-ல் காந்தி பிரதான தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம், கங்கையம்மன் கோயில் தெருவில் 24 மணிநேர மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். மண்டலம் 7 வார்டு 84 மற்றும் மண்டலம் 15-ல் கண்ணகி நகரில் சுகாதார மையமும், சரஸ்வதி நகரில் மருத்துவமனையும், ஈஞ்சம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் விபத்து முதலுதவியுடன் கூடிய மருத்துவமனையும் கட்டப்படும்.

நெடுஞ்செழியன் சாலையில் ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

சமூக நலக்கூடம்: இதேபோல, 1, 7, 9, 10, 11, 12, 15 ஆகிய மண்டலங்களிஸ் அனைத்து வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.