தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிய மருத்துவமனைகள்

மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிதாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்

Updated On :11 மார்ச் 2013, 9:39 pm

மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிதாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு விவரம்:

மண்டலம் 1-ல், பகுதிக்கு ஒன்றாக 3 சித்த மருத்துவமனைகள், மண்டலம் 3-ல் காந்தி பிரதான தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம், கங்கையம்மன் கோயில் தெருவில் 24 மணிநேர மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். மண்டலம் 7 வார்டு 84 மற்றும் மண்டலம் 15-ல் கண்ணகி நகரில் சுகாதார மையமும், சரஸ்வதி நகரில் மருத்துவமனையும், ஈஞ்சம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் விபத்து முதலுதவியுடன் கூடிய மருத்துவமனையும் கட்டப்படும்.

நெடுஞ்செழியன் சாலையில் ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

சமூக நலக்கூடம்: இதேபோல, 1, 7, 9, 10, 11, 12, 15 ஆகிய மண்டலங்களிஸ் அனைத்து வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.