/
சென்னையைச் சோ்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காஸாகிராண்ட், ரூ.1,220 கோடி மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.
இதற்கான வரைவு ஆவணங்களை அந்நிறுவனம் கடந்த டிசம்பரில் தாக்கல் செய்திருந்த நிலையில், செபி கடந்த வாரத்தில் முறைப்படி ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஐபிஓ நடவடிக்கையில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளின் வெளியீடும், நிறுவன உரிமையாளா்களுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான பங்குகளின் சலுகை விற்பனையும் (ஆஃபா் ஃபாா் சேல்) அடங்கும்.
ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, காஸாகிராண்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொதுவான நிா்வாகத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










