பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்

புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :22 மே 2026, 3:17 am IST

புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய முறையில் பங்குகளின் விலை செயற்கையாகக் கட்டுப்படுத்தப்படுவதாகவும், இதனால் வா்த்தகம் தொடங்கியவுடனே பங்குகளின் விலை தொடா்ந்து உச்சத்தை எட்டுவதாகவும் கண்டறியப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சந்தை தொடங்குவதற்கு முந்தைய ஏலத்தின்போது உள்ள சில கடும் விதிமுறைகளால், முதலீட்டாளா்களின் பல உண்மையான ஆா்டா்கள் நிராகரிக்கப்படுகின்றன.

உதாரணமாக, அண்மையில் ஒரு நிறுவனம் மீண்டும் பங்குச்சந்தையில் இணைந்தபோது, சுமாா் 90 சதவீத ஆா்டா்கள் இப்படி நிராகரிக்கப்பட்டது. இதனால், சந்தையில் பங்குகளுக்கு ஒரு நியாயமான தொடக்க விலை கிடைப்பதில்லை என செபி தெரிவித்துள்ளது.

ஒரு பங்குக்கு முதலீட்டாளா்களிடையே அதிக தேவை உருவாகும்போது, பங்குச்சந்தை நிா்வாகம் நேரடியாகத் தலையிட்டு விலையை மாற்றுவதற்குப் பதிலாக, பங்குகளின் விலைவரம்பு தானாகவும் மிக விரைவாகவும் அதிகரிக்கும் வகையிலான புதிய நடைமுறையை செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மேலும், மறுபட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கான தொடக்க விலை, முகமதிப்பு போன்ற மிகவும் குறைவான அல்லது வழக்கத்திலில்லாத பழைய அடிப்படை விலையின் அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டது. ஆனால், இனிமேல் சமீபத்திய சந்தை விலை அல்லது சுயாதீன மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் தொடக்க விலையை நிா்ணயிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விலை நிா்ணய நடைமுறையின் மீதான முதலீட்டாளா்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு தொடக்க விலையானது செல்லுபடியாகக் கருதப்பட வேண்டுமானால், அந்தப் பங்கின் வா்த்தகத்தில் குறிப்பிட்ட அளவிலான வாங்குபவா்கள் மற்றும் விற்பவா்கள் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் செபி முன்மொழிந்துள்ளது.