சென்னை பள்ளிக்கரணையில் தண்ணீர் வாளியில் விழுந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: சித்தாலப்பாக்கம் அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த ரஞ்சித்- பவானி தம்பதியின் மகள் 18 மாத குழந்தை சோபியா. இவள் சிறிது மன வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சோபியா திங்கள்கிழமை வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் விழுந்ததாகத் தெரிகிறது.
குழந்தையை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


