சென்னை சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை வாகனச் சோதனைக்காக தடுத்தபோது கீழே விழுந்து காயமடைந்தார். அவரை தடுத்து நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரும் தடுமாறி விழுந்து காயமடைந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சேத்துப்பட்டு மங்காளபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (25). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சேத்துப்பட்டு சத்தியமூர்த்தி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனை செய்துக் கொண்டிருந்த போலீஸார், அவரை நிறுத்த முயன்றனர்.
போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மனோஜ்குமார், சாலையின் ஓரமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சாலையோர தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியில் மனோஜ்குமார் காயமடைந்தார்.
அதேவேளையில் அவரை தடுக்க முயன்ற சேத்துப்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நித்யானந்தம் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
மனோஜ்குமார் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், நித்யானந்தம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


