சென்னை சென்ட்ரலில் ரிக்ஷாகாரரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பியோடிய பெண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முத்து (50). இவர் அங்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முத்து வியாழக்கிழமை ரிக்ஷாவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையுடன் பர்தா அணிந்த ஒரு பெண் அங்கு வந்தார். அவர் முத்துவிடம், தனது தந்தை சாலையின் மற்றொரு முனையில் நடக்க முடியாமல் நிற்கிறார். குழந்தையை சிறிது நேரம் வைத்திருந்தால் தந்தையை அங்கிருந்து அழைத்து வந்துவிடுவேன் என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய முத்து, அந்த குழந்தையை வாங்கியுள்ளார். உடனே அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
வெகுநேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வரவில்லை. குழந்தையை கொடுத்துவிட்டு தப்பிக்கவே அந்தப் பெண் அவ்வாறு நாடகமாடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பூக்கடை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட போலீஸார், அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

