சென்னை சென்ட்ரலில் ரிக்ஷாகாரரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பியோடிய பெண் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்தவர் முத்து (50). இவர் அங்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முத்து வியாழக்கிழமை ரிக்ஷாவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையுடன் பர்தா அணிந்த ஒரு பெண் அங்கு வந்தார். அவர் முத்துவிடம், தனது தந்தை சாலையின் மற்றொரு முனையில் நடக்க முடியாமல் நிற்கிறார். குழந்தையை சிறிது நேரம் வைத்திருந்தால் தந்தையை அங்கிருந்து அழைத்து வந்துவிடுவேன் என்று கூறினார். அவரது பேச்சை நம்பிய முத்து, அந்த குழந்தையை வாங்கியுள்ளார். உடனே அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
வெகுநேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வரவில்லை. குழந்தையை கொடுத்துவிட்டு தப்பிக்கவே அந்தப் பெண் அவ்வாறு நாடகமாடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பூக்கடை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட போலீஸார், அங்குள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!

புதிய முகங்களுக்கு வாய்ப்பு: தில்லி பாஜகவில் வரவிருக்கும் மாற்றங்கள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


