வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி மே 15-ல் திமுக சார்பில் பொதுக்கூட்டம்

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On :1 மே 2013, 9:00 pm

சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 15-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேச உள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

50 சதவீதத்துக்கும்மேல் பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் எழுச்சி நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மே 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். வடசென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.

பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடலூரிலும், பொருளாளர் மு.க.ஸ்டாலின் கரூரிலும், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கோவையிலும் பேச உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.