ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

"மனிதவளத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு'

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

News image
Updated On :2 மே 2013, 6:48 am

நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் மனித வளம் ஆற்றலை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

சென்னையை அடுத்த கெüரிவாக்கம் நியூபிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:

மாணவர்களுக்கு அறிவுசார் கல்வி வழங்கி, அவர்களது அறிவாற்றலை மேம்படுத்தும் பணியை பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.

அதற்கு உறுதுணையாகத் திகழ்ந்து வரும் ஆசிரியர்களின் சேவை என்றென்றும் பாராட்டுக்குரியது.

மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்றார்.

விழாவில் 176 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், கல்லூரி தலைவர் கே.லோகநாதன், செயலர் வி.எஸ்.மகாலட்சுமி, இயக்குநர் ஏ.சுவாமிநாதன், முதல்வர் வி.கனகசபை, ஆந்திர மகிளா காங்கிரஸ் தலைவர் ஏ.சுனிலா பிரதாப், பேராசிரியர் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.