நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை எனத் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக உருவாகியிருந்தது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதுவரை இப்படம் ரூ. 400 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் இப்படத்திற்கு எந்த வரவேற்பும் இல்லையென்றும் வசூல் ரீதியாக மிகச் சுமாரான தொகையையே வசூலித்துள்ளதாகத் தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதற்கு முன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படமும் தமிழகத்தில் தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Tiruppur Subramaniam has stated that actor Ram Charan's peddi failed in tn theatres
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











