/

அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக 3 பேர் கைது

ராஜீவ் காந்தி சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :11 மே 2013, 9:48 pm

ராஜீவ் காந்தி சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்கள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜீவ் காந்தி சாலையில் ஒரு குறிப்பிட்ட இருசக்கர வாகன நிறுவனம் அனுமதியின்றி பைக் ரேஸýக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக நந்தனம், மத்திய கைலாஷ் வழியாக இருசக்கர வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலையை நோக்கி சென்றன.

ராஜீவ் காந்தி சாலையில் அவர்கள் சென்றபோது ஆலன் (22) என்பவரின் இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதியதாம். இதனையடுத்து பின்னால் வந்த கார் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காருக்குப் பின்னால் வந்த நாராயணன் (22) என்பவர் ஓட்டி வந்த பைக், கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆலன் மற்றும் நாராயணன் ஆகியோரையும் ரேஸýக்கு ஏற்பாடு செய்திருந்த ராகேஷ் (28) என்பரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.