சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.
வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் தேவராஜ், தாமோதரன். இதில் தாமோதரன் தனியார் வங்கியில் செக் கலெக்ஷ்ன் ஏஜென்டாக பணிபுரிகிறார். இருவரும் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு மொட்டை மாடியில் தூங்கினார்களாம். நள்ளிரவு 2.30 மணிக்கு கீழே வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு 19 சவரன் நகை, ரூ. 30,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த வீட்டில் 2 டால்மேஷன் வகை நாய்கள் உள்ளன. வெளியாட்கள் நுழைய முடியாத அந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்கு தெரிந்தவர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

