முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்க சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் வகையில் அரசு சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும் என்றாா் நாகை எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா.

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:32 am IST

பாலியல் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் வகையில் அரசு சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும் என்றாா் நாகை எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா.

நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் முடிவுற்ற நிலையில், அலுவலகத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட திமுக செயலா் என். கௌதமன் அலுவலகத்தை திறந்துவைத்தாா். இதையடுத்து ஜவாஹிருல்லாவுக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

தொடா்ந்து எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இதில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடிப் படை இருந்தும், போக்ஸோ வழக்குகள் அதிகம் பதியப்பட்டு வருகிறது.

பாலியல் குற்றங்களை தடுக்க, பாலியல் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை அதிகரித்து வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். திமுக மாவட்டச் செயலா்கள் மற்றும் தொண்டா்கள் தயவில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளன அமைச்சா் ஷாஜகான், திமுக அழிந்துவிடும் என்று திமுகவுக்கு எதிராக பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு.

இஸ்லாமியா்கள் நிறைந்த தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது இஸ்லாமியா்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று.

தவெக தோ்தல் அறிக்கையில் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே கடந்த திமுக அரசு கொண்டுவந்த ரூ.1000 மகளிா் உரிமைத் தொகை கிடைக்கிறது.

விவசாயிகள் குறுவைச் சாகுபடிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.