மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சென்னை நகர நதிகள் சீரமைப்பு: மக்களிடம் இன்று கருத்துக் கேட்பு

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 10:51 pm

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகள் சீரமைப்பு குறித்து பொதுமக்களிடம் புதன்கிழமை கருத்துக் கேட்கப்பட உள்ளது.

இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித் துறை கூட்ட அரங்கில் புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை மாநகர நதிகள் மற்றும் நீர் நிலைகளைச் சீரமைக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, ஒருங்கிணைந்த கூவம் நதி சீரமைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்த பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு கூவம் நதி சீரமைப்பின் பெருந்திட்ட வரைவு தயாரிக்கும் பணிக்கு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.