நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கார் மோதி சிறுவன் பலியான வழக்கு: 2 பேருக்கு ஜாமீன்

சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On :22 ஜூன் 2013, 4:13 am IST

சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பேருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த மே 23-ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓடிய ஒரு கார் எழும்பூர் பாந்தியன் சாலையில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் மீது மோதியது. அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறி எம்பீ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜி மற்றும் அவரது நண்பர்கள் குமார், அனில் ராவ், சயீது அன்வர் ஆகிய 4 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி அனில் ராவ், சயீது அன்வர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ராஜேந்திரன், மனுதாரர்கள் இருவரும் திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.