வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு: இளைஞர்களுக்கு அழைப்பு

நெய்வேலியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பில் சென்னை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On :11 ஜூலை 2013, 11:18 pm

நெய்வேலியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பில் சென்னை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெளியிட்ட செய்தி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

"சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளவேண்டும். "சிப்பாய் பொதுவான கடமை' பதவியில் சேர 10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

"சிப்பாய் தொழில்நுட்பம் அறிந்தவர்' பதவியில் சேர 8-ம் வகுப்பு படித்தவர்கள் ஜூலை 21-ம் தேதி நடைபெறும் முகாமிலும், "சிப்பாய் எழுத்தர் / ஸ்டோர் கீப்பர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் முகாமிலும் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமில் 17 ஆண்டு 6 மாதம் முதல் 23 வரை வயதுடைய ஆண்கள் கலந்துகொள்ளலாம் என்றார் சுந்தரவல்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.