நெய்வேலியில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பில் சென்னை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி வெளியிட்ட செய்தி: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
"சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளவேண்டும். "சிப்பாய் பொதுவான கடமை' பதவியில் சேர 10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 20-ம் தேதி நடைபெறும் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.
"சிப்பாய் தொழில்நுட்பம் அறிந்தவர்' பதவியில் சேர 8-ம் வகுப்பு படித்தவர்கள் ஜூலை 21-ம் தேதி நடைபெறும் முகாமிலும், "சிப்பாய் எழுத்தர் / ஸ்டோர் கீப்பர்' பதவியில் சேர 12-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 22-ம் தேதி நடைபெறும் முகாமிலும் கலந்துகொள்ளலாம்.
இந்த முகாமில் 17 ஆண்டு 6 மாதம் முதல் 23 வரை வயதுடைய ஆண்கள் கலந்துகொள்ளலாம் என்றார் சுந்தரவல்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

