பாலவாக்கத்தில் நகைக்காக மூதாட்டி கடத்தப்பட்டது தொடர்பாக பணிப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலவாக்கம் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் ஜஹாரா (60). இவர் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் ஜஹாராவை தாக்கி காரில் கடத்தியது. அந்த கும்பல் ஜஹாரா அணிந்திருந்த நகைகளைப் பறித்துவிட்டு, கோவிந்தன் நகரில் அவரை விட்டுவிட்டு தப்பியோடியது.
இது குறித்து நீலாங்கரை உதவி ஆணையர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அந்த வீட்டில் வேலை செய்யும் அலிஸ் மேரி (35), அவருடைய உறவினர்கள் பாலவாக்கத்தைச் சேர்ந்த பி.பினு (25), குடவாசல் அருகேஅரவன்குடியைச் சேர்ந்த அமுல்ராஜ் (26), மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 4 பேரும் ஜஹாராவை கடத்தி நகையைப் பறித்தது தெரிந்தது.
4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, கார் பறிமுதல் செய்
யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


