விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுபவர்களிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்தது பற்றி..

News image

நீட் வினாத்தாள் கசிவு - file photo

Updated On :15 ஜூன் 2026, 2:01 pm IST

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள குற்றம் சாட்டப்பட்டு மூவரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்றக் காவலில் உள்ள மனீஷா சஞ்சய் வாக்மாரே, தனஞ்சய் நிவ்ருத்தி லோகண்டே, சுபம் மதுகர் கைர்னார் ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை, பொறுப்பு நீதிபதி சுரேந்தர் மோஹித் சிங் விசாரித்தார்.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிவு மற்றும் வினாத்தாள் விநியோகத்திற்கு மூவர் உதவியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை தொடர்பாகக் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றத்தின் அனுமதியை சிபிஐ அளித்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிபிஐ இதுவரை 13 பேரைக் கைது செய்துள்ளது.

நீட் இளநிலை தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, தேசியத் தேர்வுகள் முகமை மே 12-ஆம் தேதி அத்தேர்வை ரத்து செய்தது.

ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

A court here on Monday allowed the CBI's plea to question three accused in jail in the NEET paper leak case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.