FOLLOW US

ON GOOGLE DISCOVER

தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

இப்படியே தொடர விட முடியாது! நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

இப்படியே தொடர விட முடியாது என நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து.

News image

உச்ச நீதிமன்றம் - File photo

Updated On :24 ஜூலை 2026, 2:48 pm IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை இப்படியே தொடர அனுமதிக்க முடியாது, இனி நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

நீட் இளநிலை நுழைவுத் தேர்வில் தொடர்ச்சியாக நிகழும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறிய உச்ச நீதிமன்றம், கணினி முறையில் நீட் தேர்வை நடத்தும் திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோரைக் கொண்ட அமர்வு, நீட் வினாத்தான் கசிவு சம்பவத்தைத் தடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை இனி உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் தற்காலிக அல்லது அவசரக்கால நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கல்களைத்தான் ஏற்படுத்தி வருகின்றன என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

நீட் தேர்வை முற்றிலும் கணினி முறையில் மாற்றுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிவியுங்கள். கணினி முறையில் தேர்வு நடத்தப்படும்போது வினாத்தாள் கசியாமல் இருக்க எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் கூறுங்கள். நிர்வாக ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் இனி நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்கள் தொடர்புடைய இந்த விவகாரத்தில், மத்திய அரசு தனிக் கவனம் செலுத்துகிறது. நீதிமன்றத்தில், தங்களது முழு திட்டத்தையும் தெளிவுபடுத்த சில காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

இதை இப்படியே போக விட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.