கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (42), இவரது நண்பர்கள் பாடியநல்லூரைச் சேர்ந்த பாஸ்கர் (30), மகேஷ்குமார் (35), மணிகண்டன் (18), மணிகண்டன் (எ) சரத்குமார் (18).
இவர்கள் 5 பேரும் ஆந்திர மாநிலம் வரதையப்பாளையம் அருகே உள்ள கோனே நீர் வீழ்ச்சியை சுற்றிப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை காரில் புறப்பட்டனர். ÷பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் கார் சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தொடர்ந்து அவர்களை 108 அவசர ஊர்தியில் ஏற்றி பொன்னேரி அரசு மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகேஷ்குமார், சரத்குமார் ஆகிய இருவரும் இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

